Moneycontrol News

Latest News from Moneycontrol.com

Friday, July 27, 2007

சென்செக்ஸ் என்றால் என்ன?



நீண்ட காலமாக எழுத முடியாததற்கு மிக்க வருந்துகிறேன்! தென்றலும், பங்கு வணிகமும் அவர்களது பணிகளுக்கிடையிலும் தொடர்ந்து எழுதி வருவது மிக்க மகிழ்ச்சித் தருகிறது.

இன்று சென்செக்ஸ்(532) மற்றும் நிஃப்டி(174) தட தடவென பல புள்ளிகளை இழந்துள்ளது. இன்று பல புள்ளிகளை சந்தை இழக்கக்கூடும் என காலையிலேயே பங்குவணிகம் குறிப்பிட்டிருந்தது அவரது அனுபவத்தைக் காட்டுகிறது.

சென்செக்ஸ், சென்செக்ஸ் என நிறையக் கேட்டிருக்கிறோம் அது என்ன எனபதை இங்கு பார்ப்போம்

அதுக்கு முன்னாடி இந்தியாவின் பங்கு சந்தை வரலாற்றையும் கொஞ்சம் பார்ப்போம்.

இந்தியாவின் பங்கு சந்தை வரலாறு 1875-லிருந்து ஆரம்பிக்கிறது. அப்போது 318 பேர் தலைக்கு ரூ. 1/- கொடுத்து இப்போது பாம்பே ஸ்டாக் எக்சேஞ்ச் என அழைக்கப்படுகிற BSE-யில் உறுப்பினரார்கள்! (இப்போ இவங்க வம்சா வழியெல்லாம் எங்கே இருக்குன்னு தெரியல :) )

1875-லேயே தொடங்கினாலும் ஒன்னும் பெருசா சொல்லிக்கிற மாதிரியில்ல. 1986 வரைக்கும் பங்கு சந்தையை மதிப்பிடுவதற்கு எந்த குறியீடும் இல்லை. 1986 -லே தான் BSE சென்செக்ஸ் என்ற பங்கு சந்தைக் குறியீட்டை அறிமுகப்படுத்தியது.
மார்கெட்டில் இருக்கிற 30 பெரிய கம்பெனிகளின் பங்கு விலைகளைப் பொருத்து சென்செக்ஸ் புள்ளிகள் கணக்கிடப்படுகின்றன! பல கம்பெனிகள் பங்கு சந்தையில் வெளியிடப்பட்டாலும் எல்லாமே குறியீட்டெண்களைக் கணக்கிட எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.



30 பெரிய கம்பெனிகளின் பங்குகளைப் பொருத்தே இது அமைவதால் இது BSE 30 குறியீடு எனவும் அழைக்கப்படுகிறது. இந்த கம்பெனிகளின் பங்கு விலைகளில் மாற்றம் வரும் போது சென்செக்ஸிலும் ஏற்ற இறக்கங்கள் வரும். BSE 30-இல் 30 பங்குகள் 13 விதமான துறைகளிலிருந்து எடுத்துக் கொள்ளப்படுகிறது. அவை கட்டுமானம், வங்கி, ஆட்டோ மொபைல், டெக்னாலஜி போன்றவைகளாகும். இதைத் தவிர BSE 50, BSE 100 போன்ற குறியீடுகளும் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்டன. BSE 50, 100 என்ற எண்கள், எத்தனைக் கம்பெனிகள் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படுகின்றன எனபதைக் குறிக்கிறது.
இதே போல் துறைவாரியான குறியீடுகளும் உள்ளன. உலோகம், வங்கி குறியீடு என.

BSE என்பது Bombay Stock Exchange-யைக் குறிப்பது போல நிஃப்டி என்பது தேசிய பங்கு சந்தையைக் குறிக்கிறது. இதன் தலைமையகம் டெல்லியாகும். இதில் 50 கம்பெனிகள் 24 விதமான துறைகளிலிருந்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.நிஃப்டியும் நிஃப்டி 500, ஜுனியர் என பல குறியீட்டெண்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

BSE-க்கு சென்செக்ஸ் எனவும் NSE-க்கு நிஃப்டி என்பதும் பங்கு குறியீட்டெண்ணாகும். இதைத் தவிர கல்கத்தா மற்றும் மெட்ராஸ் பங்கு சந்தைகளும் உள்ளன.

சரி, இது வரை குறியீட்டெண்களைப் பற்றி தெரிந்து கொண்டுவிட்டோம்... எப்படி இந்த 30 நிறுவணங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன, எதை வைத்து குறியீடு கணக்கிடப்படுகிறது என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம்!

7 comments:

தென்றல் said...

நல்ல ஆரம்பம், அமிழ்து!

தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள்!

அமிழ்து - Sathis M R said...

தொடர்ந்த வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தென்றல்! உங்களது விடாத எழுத்துப் பணி என்னை வியக்க வைக்கிறது.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Unknown said...

Postings are nice.
For earn money in free time visit Mcx Tips, Share Tips,
To earn daily 5000-10000 rupees by our Free Mcx Tips , Free Stock Tips and earn money by investing stock market

Unknown said...

நான் நீண்ட நாட்களாக தேடியது இது
how to contact you????

Ramesh DGI said...

Great article with excellent idea! I appreciate your post. Thanks so much and let keep on sharing your stuffs.
Tamil News | Latest Tamil News | Tamil Newspaper

செல்வம் said...

நன்றி ஐயா