Moneycontrol News

Latest News from Moneycontrol.com

Thursday, June 14, 2007

எதற்க்காக பங்கு சந்தையில் ஈடுபடுகிறேன்!

தென்றல் அடிப்படைக் கருத்துகளையும் பங்குவணிகம் டெக்னிக்கலாகவும் எழுதுவதால் மத்தத இங்க சொல்லலாம்னு இருக்கேன்.

முதல ஷேர் மார்கெட்ல எதுக்கு ஈடுபடனுங்கறதுக்கான என்னோட கருத்துக்கள்... பணம் பண்ணுவதற்கு தான். ஆனால் அதுக்கு இது எப்படி சரியான வழி...



1. ரொம்ப பணம் தேவையில்லை... முதலீடா ஒரு வீடோ, நிலமோ வாங்குவதற்கு நமக்கு நிறையப் பணம் தேவைப்படும்... ஆனா இதுக்கு அவ்வளவெல்லாம் தேவையில்லை.



2. பங்கு வர்த்தகப் பரிவர்த்தனைக்கு அதிக நேரம் ஒதுக்க தேவையில்லை. ஒரு தொலைபேசியோ, கணிணியும் இன்டர்நெட்டுமோ இருந்தால் போதும்


3. பங்குகளை எளிதில் பணமாக்கும் வசதி (Liquidity)(வாங்குவதற்கும் ஆள் வேண்டும்! :) )


4. இன்னொரு முக்கிய காரணம் - தேசப்பற்று. உண்மைதாங்க, நம்ப நாட்டு முதலீட்டாளர்கள் அதிகமாகிறப்ப சந்தையின் ஸ்திரத்தன்மையும் கூட வாய்ப்பிருக்கிறது.

அடுத்தடுத்தப் பதிவுகளில இதெல்லாம் எப்படிங்கறத பார்க்கலாம்!

1 comment:

தென்றல் said...

கலக்குங்க, அமிழ்து!

(மீண்டும் ஒருமுறை) வாழ்த்துக்கள்!